அண்ணியைக் பலாத்காரம் செய்ய முயன்ற மைத்துனன்.. முடியாததால் முகத்தில் ஆசிட் வீச்சு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் தனது முயற்சி கைகூடாததால் சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள சபார் பகுதியை சேர்ந்த அந்த பெண் தனது கணவரின் சகோதரரான ஜஹாங்கிர் என்பவருடன் சொந்த கிராமமான குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.

Brother-in-law throws acid on woman after failed rape attempt

வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஜஹாங்கிர், சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரது ஆசைக்கு இணங்க மறுத்த அந்தப்பெண் கூச்சலிட்டு போராடினார். இதனால், வெறுப்படைந்த ஜஹாங்கிர் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடி விட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+