தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. பதன்கோட் அருகே பாக். தீவிரவாதியை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
சண்டிகர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இரு தீவிரவாதிகள் திரும்பி பாகிஸ்தானுக்கே ஓட்டம்பிடித்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படைத்தளத்தில் இரு வாரங்கள் முன்பு 6 தீவிரவாதிகள் ஊடுருவி சரமாரி தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு, தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட பின்னர், விமானதளம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் பெஷாவர் அருகே பல்கலைக்கழகம் ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 21 மாணவர்களை சுட்டு கொன்றனர். பாக். பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற தாக்குதல் பாணியை இந்தியாவில், அதுவும் பதன்கோட்டில் மீண்டும் நடத்தும் சதி திட்டத்தோடு, 3 தீவிரவாதிகள் பாக். நாட்டில் இருந்து, இன்று அதிகாலை, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். பதன்கோட் அருகேயுள்ள தாஷ் கிராமத்திற்குள் அவர்கள் வந்தபோது, எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை கண்டனர்.
உடனடியாக, தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவன் உயிரிழந்தான். மற்ற இருவரும் மீண்டும் பாகிஸ்தானுக்கே தப்பியோடிவிட்டனர். வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு உள்ளது.
அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவின்போது, தூரத்தில் நடமாடும் நபர்களை கண்டுபிடிப்பது கஷ்டம். இந்த பனிப்பொழிவை பயன்படுத்தி தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
அப்போ விரிசல் உண்மைதான் போல.. மோடி கூட விஷ் பண்ணிட்டாரே.. ஸ்டாலினை தாமதாக வாழ்த்திய ராகுல் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
எடப்பாடி எதுக்குத் தான் இருக்காரு.. அதிமுகவை அண்டர் கண்ட்ரோலில் எடுத்த அமித் ஷா! குமுறும் ர.ர.க்கள்! -
சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications