ராம்நாத் கோவிந்த் அல்லது மீராகுமார்.. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.. மாயாவதி ஒரே நெகிழ்ச்சி!
ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாடாளுமன்றத்தில் வாக்களித்தார். அப்போது, ராம்நாத், மீராகுமார் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி என்று கூறினார்.
நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்

அதற்காக நாடாளுமன்றம் மற்றும் மாநில தலைமை செயலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பிரதமர் மோடி, பாஜக அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாக்கை அளிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். பின், அவர் தனது வாக்கை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி என்று மாயாவதி கூறினார்.
மேலும், தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற எங்களது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications