வாரணாசியில் போட்டி... ஆம் ஆத்மி கொள்கையை மீறினார் கேஜ்ரிவால்!!

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் எம்.பி. பதவிக்கு போட்டியிட அனுமதிக்க மாட்டோம் என்று தாம் அறிவித்ததையே கேஜ்ரிவால் மீறியிருப்பதாக அவரது அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. அப்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, ராக்கி பிர்லா, வடமேற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் கேஜ்ரிவாலோ, சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டோம் என்றார். இதனாலேயே ராக்கி பிர்லா அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

ராக்கி பிர்லா டிஸ்மிஸ்

ராக்கி பிர்லா டிஸ்மிஸ்

இதைத் தொடர்ந்து கட்சியில் ராக்கி பிர்லா இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

வாரணாசியில் போட்டி- கேஜ்ரிவால்

வாரணாசியில் போட்டி- கேஜ்ரிவால்

இந்த நிலையில் எம்.எல்.ஏவாக இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தாமே லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்திருக்கிறார். இது அக்கட்சியில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதெப்படி போட்டியிடலாம்?

அதெப்படி போட்டியிடலாம்?

அப்படியானால் எம்.எல்.ஏக்கள், எம்.பி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டோம் என்ற ஆம் ஆத்மியின் கொள்கை காற்றிலா பறந்தது? என்று அவரது அதிருப்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிட்டிங் எம்.எல்.ஏதானே..

சிட்டிங் எம்.எல்.ஏதானே..

அதாவது சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மட்டும் எப்படி லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+