மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.. ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம்?
டெல்லி: ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரில் ஊழல் தடுப்பு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் அவற்றை அவசர சட்டத்தின்மூலம் அமல்படுத்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விரும்புகிறார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று மீண்டும் கூடி முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications