ஸ்பெக்ட்ரம் 'ஜேபிசி'..சாக்கோவுடன் தொடர்ந்து மல்லுகட்டும் டி.ஆர். பாலு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவான ஜேபிசி தமது வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
ஜேபிசியின் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அதை ஜேபிசி தலைவர் சாக்கோ, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

பாலு கடும் எதிர்ப்பு
இதற்கு டி.ஆர். பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜேபிசி உறுப்பினர்களில் ஒருவரான என்னைக் கேட்காமல் குழுவின் புதிய தேதியை நிர்ணயித்தது தவறு; அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு வேறு தேதியில் ஜேபிசி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சாக்கோவுக்கு டி.ஆர். பாலு கடந்த 13-ந் தேதி கடிதம் அனுப்பி வைத்தார்.

சாக்கோ பிடிவாதம்
ஆனால் பி.சி.சாக்கோ விட்டுக் கொடுக்காமல், உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட ஆவணங்களை நான் ஆராய்ந்துவிட்டேன். அவற்றின் மூலம் ஜேபிசி விசாரணைக்குப் புதிதாக ஏதும் கிடைத்துவிடாது என்று பதில் கடிதம் அனுப்பி வைத்தார்.

மீண்டும் பாலு கடிதம்
இந் நிலையில் சாக்கோவுக்கு மீண்டும் டி.ஆர். பாலு நேற்று அனுப்பிய கடிதத்தில், ஜேபிசி வரைவு அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறையால் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் முரண்
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலோ பிரதமரின் அறிவுரை மதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கும் தெரியும்
இதன்படி பிரதமர் அறிவுரை வழங்கும் அளவுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருள்.

தொடர் முரண்கள்
இதேபோல முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொள்கைப்படி அலைக்கற்றை ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக ஜேபிசி வரைவு அறிக்கையில் பல முரண்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தெளிவு கிடைக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை ஜேபிசி ஆராய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர், தான் நேரில் ஆஜராக விடுத்த வேண்டுகோளை "நேரமில்லை' எனக் கூறி நீங்கள் நிராகரித்தீர்கள்.
ஆனால், உங்கள் வசதிக்கேற்ப ஜேபிசி பதவிக் காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்தீர்கள். எனவே, அலைக்கற்றை வழக்கு ஆவணங்களை முழுமையாக ஆராயும் வரை, ஜேபிசி வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications