காவிரி ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி
காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இப்போதுவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இன்னும் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு இதில் போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது.
இதனால் இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அதில், காவிரி வாரியம் எப்போதும் முதல் கூட்டத்தை தொடங்கும் என்று தெரியவில்லை. இதில் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டம் கூட்டி அவர்கள் முடிவெடுக்க பல காலம் ஆகும். காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது.
தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம். இதுவரை திறந்துவிடப்பட்டே நீரே போதுமானதாக இருக்கும். கர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இது பாசனத்திற்கு உதவியாக இருக்கும், என்றுள்ளார்.