ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வர முடியாது: ராஜ்நாத் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதிய சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் ராமர் கோவில் தொடர்பாக எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை.

Cannot bring law on building Ram Temple as BJP lacks majority in Rajya Sabha - Rajnath Singh

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்றார்.

ராஜ்யசபாவில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 45 பேர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 132 பேர் உள்ளனர். அதனால் தான் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்த பிறகு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சட்டம் கொண்டு வரப்படுமா என்று ராஜ்நாத்சிங் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+