யோகாவுக்கு மதச்சாயம் பூசுவதா? பிரதமர் மோடி, அமித் ஷா மீது வழக்கு..
Subscribe to Oneindia Tamil
பாட்னா: யோகாவுக்கு மதச்சாயம் பூசி, மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேவ் குமார் சிங் என்ற சமூக ஆர்வலர் சார்பில் வழக்கறிஞர் சுருதி சிங் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், மதச்சாயம் பூசுவதன் மூலம் யோகாவின் பெருமைகளை மூவரும் சீர்குலைத்து விட்டதாகவும், இதன் மூலம் மக்களின் மனதை புண்படுத்தி விட்டதமாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, நாளை (திங்கட்கிழமை) மாஜிஸ்திரேட்டு பரத் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications