பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற வழக்கில் குண்டர் கும்பல் தலைவன் ராம் ரஹீமுக்கு அடுத்த காப்பும் ரெடி!
பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் மீதான பத்திரிகையாளர் கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
பக்தைகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா எனும் ஆன்மீக அமைப்பின் நிறுவனர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாகினர். 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இன்று ராம் ரஹீம்சிங்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ராம் ரஹீம் சிங்கின் பாலியல் பலாத்கார விவகாரத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ராம் சந்திர சத்ரபதியை சுட்டுக் கொன்ற கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. ராம் சந்திர சத்ரபதியை ராம் ரஹீம் ஆதரவு கும்பல்தான் சுட்டுக் கொன்றது என்பது வழக்கு.
இந்த வழக்கிலும் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை கிடைக்கும் என ராம் சந்திர சத்ரபதி குடும்பத்தினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விதித்த பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றமே இந்த தீர்ப்பையும் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications