சரிதா நாயர் பாலியல் புகார்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு
திருவனந்தபுரம்: சோலார் சூரிய ஒளி மின் தகடு ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள சரிதா நாயர், கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லாகுட்டி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதையடுத்து எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், சோலார் சூரிய ஒளி மின் தகடு விநியோகம் தொடர்பாக நடைபெற்ற ஊழலில் சிக்கி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவே வந்திருப்பவர் சரிதா எஸ்.நாயர்.

இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது சில புகார்களை கூறி இருந்தார். இந்நிலையில், திடீரென்று திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சரிதா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சோலார் வியாபாரம் தொடர்பாக பேசலாம் எனக்கூறி தன்னை அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து, அவரது புகாரின் அடிப்படையில் அப்துல்லா குட்டி மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியது, மிரட்டல் ஆகிய குற்றங்கள் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த புகாரை திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications