என்னா ஒரு வேகம்...! தமிழக இளைஞரைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு- சித்தராமையா தகவல் #cauvery
பெங்களூரு: பெங்களூருவில் தமிழக இளைஞரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த 9-ந் தேதியன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது கன்னட திரைத்துறையினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இளைஞர் மீது தாக்குதல்
இதனை விமர்சித்து தமிழக இளைஞர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை போட்டார். இதற்காக அவரை கன்னட இனவெறி கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியது.

தமிழகம் கொந்தளிப்பு
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் கன்னட வாகனங்கள் தாக்கப்பட்டன. கர்நாடகா வங்கி முற்றுகையிடப்பட்டது.

வழக்கு போட்டுவிட்டோம்
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தமிழக இளைஞரைத் தாக்கிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்.

தமிழருக்கு பாதுகாப்பு
மேலும் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் சித்தராமையா உறுதியளித்திருக்கிறார். தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழகத்தில் எதிர்வினை காட்டப்பட்ட நிலையில்தான் கர்நாடகா அரசு விழித்துக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications