ஆந்திர முதல்வர் பற்றி அவதூறு செய்தி.. தெலுங்கானா முதல்வர் குடும்ப சேனலுக்கு நோட்டீஸ்!
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு குறித்து அவதூறான தகவல்கள் வெளியிட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் குடும்பத்திற்கு சொந்தமான டி. நியூஸ் என்ற செய்தி சேனலுக்கு ஆந்திர போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தெலுங்கானா மாநில மேலவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுமாறு தெலுங்கானா ராஷ்டிர சமித்தி எம்.எல்.ஏ ஸ்டீபன்சனுக்கு பணம் கொடுத்து நெருக்கடி தரப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாக, ஸ்டீபன்சனுக்கு போன்போட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆடியோவை பதிவு செய்த தெலுங்கானா ராஷ்டிர சமித்தி தரப்பு, அதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் குடும்ப தொலைக்காட்சியான டி. நியூஸ் சேனலில் ஒலிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு, எனது தொலைபேசி உரையாடல்களை தெலுங்கானா அரசாங்கம் ஒட்டு கேட்கிறது என்று கூறி, கதறி துடித்தார்.
இந்நிலையில், சேனல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. "எந்த ஆதாரத்தில் இந்த தொலைபேசி உரையாடல் ஒலிரப்பு செய்யப்பட்டது என்பது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்து, சேனல் நிர்வாகத்துக்கு ஆந்திர காவல்துறை நேற்றிரவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications