காவிரி நீருக்காக சண்டை போட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் - உமா பாரதி
டெல்லி: காவிரி நீருக்காக கர்நாடக - தமிழக எல்லையில் ஒருவேளை பதற்றம் எழுந்தால் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தமிழக முதல்வர் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், கர்நாடக மாநிலம் சார்பில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சித்தராமையா, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது. உண்மை நிலையை ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்துக்கு நீர் திறந்தாள் கர்நாடகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
தமிழக முதல்வர் சார்பில் தலைமை செயலர் வாசித்த உரையில், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா மீறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், நிபுணர் குழுவை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. நிபுணர் குழுவை அமைக்க கர்நாடகா கோரியுள்ளது. அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இரு மாநில அரசுகளும் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. இரு மாநிலங்களின் கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்றார்.
மேலும், நீதிமன்றத்துக்கு வெளியே இரு மாநில அரசுகளும் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்த உமா பாரதி, தமிழக - கர்நாடக எல்லையில் ஒருவேளை பதற்றம் எழுந்தால் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications