காவிரி:பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பதா? இல்லையா? என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி விவகார வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நாளை மறுநாள் (செப்டம்பர் 21) முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது.

Cauvery row: Schools to decide whether to work on Tuesday

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தமிழக அரசிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி நாளை வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழுவும் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மாண்டிய உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பதா? இல்லையா? என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் வெடித்த கலவரத்தின் போது பள்ளிகளுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்வில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வதந்திகளை நம்ப வேண்டாம். பெங்களூருவில் நாளை முழு அடைப்பு ஏதும் இல்லை என பெங்களூரு நகர போலீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+