விளக்கம் கேட்க இவ்வளவு நாட்கள் தேவையா? காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி பங்கீட்டுக்கான திட்டத்தை மே 3-க்குள் வகுக்க வேண்டும்

    டெல்லி: ஸ்கீம் என்றால் என்ன என்று, மத்திய அரசு தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்டதற்கு தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார்.

    காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    Cauvery: Supreme Court condemns Union government

    இந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்றால் என்ன என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி விளக்கம் கேட்டது.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

    மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்காதது ஏன்?
    உங்களின் கடமைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, என்று தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.

    மேலும், ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது, மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு அறிக்கைக்குப் பின்பே முடிவு செய்யப்படும்.
    ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    நதிநீர் தாவா சட்டத்தில், ஸ்கீம் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மத்திய அரசு காலதாமதம் செய்வதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+