"கனத்த இதயத்துடன்" கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் இன்று தமிழகத்திற்கு வந்தது #cauvery
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று தமிழகத்தை வந்தடைந்தது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நேற்று முன்தினம் இரவு 12.05 மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.
அதாவது கூடுதலாக 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட நீர் இன்று காலை பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இன்று இரவுக்குள் நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications