தமிழகத்தின் பங்கை எடுத்து பெங்களூர் குடிநீர்த் தேவைக்கு திருப்பி விட்ட சுப்ரீம் கோர்ட்!
பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கும் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் ஏற்கனவே 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
பெங்களூரு நீர் தேவைக்காக 4.75 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்துள்ளது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவை மற்றும் ஆலைகளில் நீர் தேவையை பூர்த்தி செய்யவே தமிழகத்திற்கான நீர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications