தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.. கர்நாடகா விவசாயிகள் கொந்தளிப்பு..மண்டியாவில் இன்று பந்த்
மண்டியா: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அம்மாநிலத்தில் உக்கிரமான எதிர்ப்பு தொடருகிறது. மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காவிரியில் 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் விநாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதனையும் ஏற்காமல் விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டிருந்தது கர்நாடகா. வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என்பது கர்நாடகாவின் வாதம்.

தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வினாடிக்கு 5,000 கன அடி நீரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வியாழக்கிழமையன்று உத்தரவிட்டது. காவிரி மேலாண்மையத்தின் உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என ஏற்கனவே கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன.
மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் மேலக்கோட்டை சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷண் புட்டண்ணா தலைமையில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். கர்நாடகா சேனா படையினர் மைசூரில் துடைப்பத்தால் சாலையில் அடித்தபடி போராட்டத்தை மேற்கொண்டனர். மைசூர் காடா நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் நாராயண கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூர் விதான் சதா முற்றுகைப் போராட்டத்தையும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நடத்தினர்.

இதனிடையே காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட விவசாயிகள் சங்கம் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து ஶ்ரீரங்கப்பட்டணா, கண்ணம்பாடி கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மைசூர் கபினி அணை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதால் இரு மாநில எல்லைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications