நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ
கொல்கத்தா: போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்கத்தில் போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாரதா என்ற செய்தி இணையதளம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் படங்கள், வீடியோக்களை வெளியிட்டிருந்தது.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திடீரென பாஜகவில் சேர்ந்தார். ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவில் இருந்து சோவன் சட்டர்ஜி வெளியேறி இருந்தார்.

மேலும் மேற்கு வங்க அமைச்சரவை கடந்த வாரம் பதவியேற்ற அன்றே நாரதா வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஜகதீன் தன்கார் அனுமதி அளித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications