முலாயம்சிங் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிட்டது சிபிஐ!
Subscribe to Oneindia Tamil

முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ், பிரதீக் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை மையமாக வைத்துதான் மத்திய அரசு, சமாஜ்வாடி கட்சியை தம் பக்கம் வளைத்துக் கொண்டது. இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கைவிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications