ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ அப்பீல்: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்!
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் தர மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் தர இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் நடத்தி வந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதன் பயனாகவே அந்நிய முதலீடு என்ற பெயரில் சன்டிவிக்கு லஞ்சப்பணம் அளிக்கப்பட்டதாகவும், இது முதலீடு அல்ல என்றும் ஏர்செல் சிவசங்கரன் கூறியிருந்தார்.
ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் அனந்தகிருஷ்ணன் வெளிநாட்டில் வாழ்வதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை மற்றும் சிபியால் முடியவில்லை. இதனால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications