கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டம்
கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோர சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது.

6 நாட்கள் அனுமதி
எனினும் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு கடந்த 4-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து சென்றனர்.

இந்திராணி முகர்ஜி முன்பு விசாரணை
இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரித்தது.

சிபிஐ காவல் நீட்டிப்பு
இந்நிலையில் நேற்று அவரது காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

முன்னுக்கு பின் முரணாக தகவல்
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவர் பெயர் என்ன என்று கேட்டால் தான் ஒரு அரசியல்வாதி என்று தெரிவிப்பதாக தகவல்கள் வந்தன. மேலும் வீட்டு சாப்பாடுதான் வேண்டும் அடம்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஒத்துழைப்பு இல்லை
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் இன்னும் ஒரு நாளில் முடிவடைய போகிறது. மீண்டும் காவலை நீட்டித்து கேட்க வாய்ப்புகள் இல்லை என்று சிபிஐ கருதுகிறது. அவர் மழுப்பலான பதிலை அளித்து விசாரணை ஒத்துழைக்காததால் சிபிஐ விழி பிதுங்கி நிற்கிறது.

டெல்லி நீதிமன்றம்
இதுபோல் ஒருவர் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அவருக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்த விசாரணை குழு கேட்கும் உரிமை உள்ளது. அதன் படி கார்த்திக்கும் உண்மை கண்டறியும் சோதனை (narco analysis test)நடத்த டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்தி ஒத்துழைப்பாரா?
அதே வேளையில் இந்த சோதனை யாருக்கு கண்டறியப்படுகிறோ அவர் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. எனவே கார்த்தி சிதம்பரம் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications