சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 9ல் தொடக்கம்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 9ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 9ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 9 ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 16,67,673 மாணவர்கள் எழுத உள்ளன. இதேபோல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 10,98, 420 மாணவர்கள் எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைதேர்தல்களை முன்னிட்டு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒருவாரம் தள்ளி தாமதமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.