ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோத நிறைவேற்றப்படும்: ஜவடேகர் உறுதி !
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், விலங்குகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு குறித்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
தொடர் மழையால் சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது நாம் விழித்தெழ வேண்டிய நேரம் நீர்வழித் தடங்களையும், நீர்வடிகால்வாய்களையும் முறையாகப் பராமரித்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications