பராமரிப்பில் இல்லாத 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
மாநில வாரியாக மற்றும் ஆண்டுதோறும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டதாகக் காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், " மாநில வாரியாக மற்றும் ஆண்டுவாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உதய் மூலம் பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் சௌத்ரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டைப் பெறுவது தொடர்பாக விதிமுறைகள் 27 மற்றும் 28-வது பிரிவுகளின் கீழ் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆதார் மையங்களில் உள்ள அதிகாரிகள் ஆதார் எண்ணைகளை இவ்விதிகளின் படி முடக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் 11.45 லட்சம் பான் அட்டைகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்கள் ஆதார் எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள https://resident.uidai.gov.in/aadhaarverification இணையதளத்தில் சென்று பார்க்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசின் விதிமுறைகள்.. இனி RTO ஆபீஸ் போக வேண்டாம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம் -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்











Click it and Unblock the Notifications