தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதை சட்டை செய்யாமல் இன்று அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து 22 நிறுவனங்களுடன் இன்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நெடுவாசலில் மட்டும் மக்களின் சந்தேகங்களை தீர்த்தப்பின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தமிழிசை, பொன்னார்
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயத்தை அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்படாது என்றார்.

உறுதியான நாராயணசாமி
தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக பல்வேறு விமர்சனங்களுக்காளான பின்னரே முதல்வர் எடப்பாடி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் புதுவை முதல்வர் நாராயணசாமியோ ஆரம்ப கால முதலே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

31 இடங்களில்..
நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆயினும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முக்கனிகள் விளையும் பூமியான நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கையெழுத்தானது
ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் இன்று அவசர அவசரமாக டெல்லியில் கையெழுத்தானது. அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications