தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதை சட்டை செய்யாமல் இன்று அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து 22 நிறுவனங்களுடன் இன்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நெடுவாசலில் மட்டும் மக்களின் சந்தேகங்களை தீர்த்தப்பின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தமிழிசை, பொன்னார்
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயத்தை அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்படாது என்றார்.

உறுதியான நாராயணசாமி
தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக பல்வேறு விமர்சனங்களுக்காளான பின்னரே முதல்வர் எடப்பாடி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் புதுவை முதல்வர் நாராயணசாமியோ ஆரம்ப கால முதலே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

31 இடங்களில்..
நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆயினும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முக்கனிகள் விளையும் பூமியான நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கையெழுத்தானது
ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் இன்று அவசர அவசரமாக டெல்லியில் கையெழுத்தானது. அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications