பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு.. நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு
அமிருதசரஸ்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கபடும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவருக்கு வயது 95. பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்த முதல்வர்களில் இளம் வயதிலேயே முதல்வர் ஆனவரும் இவர்தான். 43 வயதில் முதல்வரானார்.

30 ஆவது வயதில் 1957 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் 1967, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே அவர் தோல்வியை தழுவியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிரா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதையே திருப்பி கொடுத்தார் பிரகாஷ் சிங் பாதல்.
-
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications