இந்தியர்கள் கடத்தல்: முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை... அலட்சியம் செய்ததா மத்திய அரசு?
டெல்லி: ஈராக்கில் இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட இருப்பதாக முன்கூட்டியே மத்திய அரசுக்கு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை அனுப்பப் பட்டதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்கள் ஒரு தொழிலாளி தப்பித்து வந்துள்ளதையடுத்து மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே, இது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதில் மொசூல் நகரைக் கைப்பற்றியதும் தீவிரவாதிகள், அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களைக் கடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைசசகம், பிரதமர் அலுவலகத்துக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அப்போது அந்த எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய மத்திய அரசு தற்போது கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications