பாக். ஆக்கிரமிப்பு "ஜம்மு- காஷ்மீர்" என பெயர் மாற்ற முடிவு!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பெயரை "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இந்தப் பகுதி பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இந்த ஆசாத் காஷ்மீரின் தலைநகராக முசாபராபாத் உள்ளது. இங்கு தனியாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் செயல்படுகிறது. இவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கிறது. இந்த நிலையில் மோடி அரசு தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிடுவதை மாற்ற முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ஜம்மு பிராந்தியத்தின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருப்பதால் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்" என்று இனிமேல் குறிப்பிட முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications