ரூபாய் நோட்டு அறிவிப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பே தெரியுமாம்….ஜெகன்மோகன் திடுக் குற்றச்சாட்டு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்த தகவல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று ஓஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்த தகவல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று ஓஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் மேலும் கூறியதாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சிலருக்கு முன் கூட்டியே தெரியும் என்று சொன்னார்.
ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெகன், ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு முன் 3 நாட்களுக்கு முன்பாகத்தான் சந்திரபாபு நாயுடு அவருக்கு சொந்தமான உணவுப் பொருள் நிறுவனத்தின் பங்குகளை விற்றதாகவும் கூறினார்.
கடந்த அக்டோபர் 22-ம் தேதி அதிக மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதமும் இதற்கு சான்று என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தமக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டார் என்றும், இந்த விவகாரத்தினால் ஏழை-எளிய மக்கள் மட்டுமே பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற முக்கிய முடிகளை எடுப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் ஜெகன் தெரிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்க அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்திருப்பது சரியான நடவடிக்கை என்றாலும், அதனை அமல் படுத்துவதில் மக்களுக்கு கடும் இன்னல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் குறிப்பிட்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications