ஆந்திராவில் பாஜக + TDP கூட்டணிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? சந்திரபாபு நாயுடுவின் கணக்கை பாருங்க
அமராவதி: ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் லோக்சபாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். அங்கு ஜெகனுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என முழங்குகிறார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில், ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

ஆந்திராவை பொறுத்தவரை அங்குள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்துவருகிறார். 47 வயதான சந்திரபாபு நாயுடு இதற்காக மாநிலம் முழுக்க அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும் 6 இடங்களில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜேஎஸ்பி கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில், நெல்லூரில் நடைபெற்ற தேதல் பிரசார கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, டிடிபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 160 + இடங்களில் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியானது. அதில், படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். வேலை கிடைக்கும் வரை, டிகிரி முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications