Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் பாஜக + TDP கூட்டணிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? சந்திரபாபு நாயுடுவின் கணக்கை பாருங்க

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் லோக்சபாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். அங்கு ஜெகனுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என முழங்குகிறார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில், ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Chandrababu Naidu says TDP alliance certainly win 160 MLA seats in Andhra Pradesh

ஆந்திராவை பொறுத்தவரை அங்குள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்துவருகிறார். 47 வயதான சந்திரபாபு நாயுடு இதற்காக மாநிலம் முழுக்க அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும் 6 இடங்களில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜேஎஸ்பி கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில், நெல்லூரில் நடைபெற்ற தேதல் பிரசார கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, டிடிபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 160 + இடங்களில் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியானது. அதில், படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். வேலை கிடைக்கும் வரை, டிகிரி முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.

அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+