எந்த ஊழலையும் செய்யவில்லை! பதற்றம் வேண்டாம்! தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை
அமராவதி: என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் எந்த முறைகேட்டையும் ஊழலையும் செய்யவில்லை. குற்றப்பிரிவு புலனாய்வு துறை போலீஸார் முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்டேன்.

அதை காண்பிக்கவும் போலீஸார் மறுத்துவிட்டார்கள். நான் சம்பந்தப்படாமலேயே என் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துவிட்டனர். என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். வழக்கை திசை திருப்புகிறார்கள். நான் எந்த ஊழலையும் செய்யவில்லை.
சட்டபடி வழக்கு விசாரணையை சந்திப்பேன். புகாரில் உண்மையில்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றப்பட வேண்டாம். அமைதி காக்குமாறும் சந்திரபாபு நாயுடு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ 317 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையிலான சட்டப்பிரிவுகளின் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சந்திரபாபு நாயுடுவின் கைது எதிரொலியாக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications