ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
திருப்பதி: தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் புயலால் பாதிக்கப் பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, சேதார விவரங்களை விவசாயிகளிடம் கேட்டு வருகிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ''மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது, மாநில பிரிவினை சட்டத்துக்கு எதிரானது. இதற்கு சோனியா காந்திதான் காரணம். சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைக்கிறார். அதற்கு வசதியாக ஆந்திராவை 2 ஆக பிரித்துள்ளனர்.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவுடனும், சீமாந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி கொண்டு, கூட்டணி அமைத்து அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறார். மாநில பிரிவினைக்கு முழு காரணமும் சோனியா காந்திதான்.
ஆந்திராவில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காங்கிரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது. புயல் கடுமையான சேதத்தை ஆந்திர மாநிலத்தில் ஏற்படுத்தியும் அதை முதல்வர் கிரண்குமார் ரெட்டி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட கூட அவருக்கு நேரம் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம். மதுபானக்கடைகளை மூடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications