Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிபான்கள் பிடியில் ஆப்கான்... இந்தியாவுக்கு சவால்.. வியூகங்களை மாற்ற வேண்டிய தருணம்: ராஜ்நாத்சிங்

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: தாலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால்; அதனால் பாதுகாப்பு தொடர்பான நமது வியூகங்களை - உத்திகளை (யுக்திகளை) மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Maathi Yosi With Irfath EP 03 | வரும் காலங்களில் India-க்கு காத்திருக்கும் சவால்

    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழகத்தின் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு நேற்று வருகை தந்தார். இன்று வெலிங்டன் மையத்தில் ராணுவ அதிகாரிகளிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:

    நமது நாட்டுடனான 2 யுத்தங்களில் அண்டை நாடு (பாகிஸ்தான்) தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது அந்த நாடு.

    பாக். மீது கடும் அட்டாக்

    பாக். மீது கடும் அட்டாக்

    நிழல் யுத்தம், பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த அத்தியாயமாக, அரசாங்கத்தின் கொள்கையாகவே மாறிவிட்டது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்வது, நிதி உதவி அளிப்பது, பயிற்சி கொடுப்பது என அத்தனையையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. நாட்டின் வடக்கு எல்லையில் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு கடந்த ஆண்டு ஒருதலைப்பட்சமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    சர்ஜிகல் தாக்குதல்கள்

    சர்ஜிகல் தாக்குதல்கள்

    நம்மால் மட்டுமே நமது மண்ணில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது. தேவைப்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிரான அந்த நாட்டுக்குள்ளும் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். எல்லையில் பாகிஸ்தானுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நமது வலிமைதான். 2016-ல் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினோம்; 2019-ல் பால்கோட்டில் தாக்குதல் நடத்தினோம். அதன்மூலம் நமது வலிமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பாக எந்த விலை கொடுத்தேனும் எதிரியை எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயார் என்பதை மீண்டும் நிரூபித்தோம்.

    சீனா ஊடுருவல்

    சீனா ஊடுருவல்

    எல்லையில் சீனா படைகள் முன்னேறிய தருணத்தில் நான் ராணுவ தளபதியுடன் இரவு 11 மணிக்கு ஆலோசனை நடத்தினேன். அப்போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நமது ராணுவ வீரர்கள் தீரத்துடன் அந்த ஊடுருவலை எதிர்கொண்டு தடுத்தது பாராட்டுக்குரியது.

    ஆப்கானும் சவால்களும்

    ஆப்கானும் சவால்களும்

    ஆப்கானிஸ்தானில் நிலைமைகள் மாறி இருப்பது இந்தியாவுக்கு சவாலானது. இத்தகைய நிலைமைகளால் இந்தியா தனது வியூகங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாம் நமது வியூகங்களை மாற்றி வருகிறோம். குவாட் எனப்படும் நான்கு நாடுகள் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா) கூட்டமைப்பும் கூட நமது வியூகங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் உருவாக்கப்பட்டதுதான். எதிரிகளை எதிர்த்துப் போராட ஒருங்கிணைந்த யுத்த குழுக்கள் தேவை. இத்தகைய குழுக்களை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. யுத்த காலங்களில் விரைவாக முடிவெடுக்க இந்த குழுக்கள் தேவைப்படுகிறது. இத்தகைய குழுக்களின் எண்ணிக்கையையும் நாம் அதிகப்படுத்த வேண்டிய நிலைமையும் உள்ளது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+