ரயிலை தடம் புரள செய்வதே தீவிரவாதிகள் நோக்கம் – சென்னை குண்டுவெடிப்பு பற்றிய ”திடுக்” தகவல்
பெங்களூர்: கவுகாத்தி ரயிலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பானது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒருவேளை இந்த வெடிப்பானது ரயில் புறப்பட்டதும் நடந்திருந்தால், கண்டிப்பாக மிகப்பெரும் அழிவாக இருந்திருக்கும்.

சென்னையிலிருந்து புறப்பட்டால் அந்த ரயிலானது தமிழ்நாட்டை 65 கிலோமீட்டர் கடந்தாக வேண்டும். இந்த குண்டுவெடிப்பு குறைந்த வீரியம் உடைய வெடிபொருளால் நடந்திருந்தாலும், ரயில் நகரும்போது வெடித்திருந்தால் ரயிலே தடம் புரண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
"ரயில்கள் தடம் புரள்வது கடினமான ஒன்றுதான்.மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருள் கலவையால் டிசம்பர் 6 ந்தேதியன்று ஆழப்புழா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது" என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒருவேளை குண்டுகள் பெட்டிகளின் அடியில் பொருத்தப் பட்டிருந்தால் இழப்புகள் பெரிதாக இருந்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அந்த வெடிபொருள் கலவை வீரியம் குறைவாக இருந்திருந்தால், ரயில் பெட்டிகளை பாதித்திருக்காது.ஆனால், இந்த குண்டானது ரயில் நகரும்போது பயங்கர வெடிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது" என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகள் இதுபற்றி கூறும்பொழுது, சில பைப்கள் வெடிபொருள் இருந்த பையில் குறுக்காக வைக்கப்பட்டிருந்தது.இதனால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தது என்று தெரிவித்தனர்.மேலும், குண்டுகளில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர் உபயோகித்திருந்ததும் தெரியவந்துள்ளது.
முன்னாள் தடவியல் நிபுணரான வரதராஜூ இதுபற்றி கூறுகையில், "தீவிரவாதிகள் ரயிலை தடம் புரளச் செய்யும் நோக்கத்தில்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.ஆனால், ரயில் தாமதத்தால் பேரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications