கல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆகுது.. அந்தரத்திலிருந்து கீழே விழுந்த கணவர்.. பதறி துடித்த மனைவி!
பாரா கிளைடரில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்
Recommended Video
டெல்லி: கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது.. பல அடி உயரத்தில் கணவன் வானத்தில் பறப்பதை ஆசை, ஆசையாக பார்த்து கொண்டிருந்தார் ப்ரீத்தி.. அடுத்த செகண்டே கீழே விழுந்து மனைவி கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்தார் கணவன்!
சென்னை அமைந்தக்கரை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் போன வாரம் கல்யாணம் ஆனது. இதையடுத்து 2 பேரும் ஹனிமூனுக்காக குலுமணாலிக்கு சென்றுள்ளனர்.
அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த இந்த தம்பதி, குலு அருகே டோபி என்ற இடத்தில் உள்ள பாராகிளைடர் சுற்றுலா தளத்துக்கும் சென்றனர். இந்த பாராகிளைடரில் செல்ல முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமாம்.. அதன்படியே அரவிந்தும், பிரீத்தியும் பாராகிளைடரில் பறக்க முன்பதிவு செய்திருந்தனர்.

கணவர்
முதலில் பிரீத்திதான் பாராகிளைடரில் ஏறினார்.. குதூகலத்துடன் மேலே பறந்துவிட்டு கீழே இறங்கிவிட்டார். இதற்கு பிறகு அரவிந்த் ஏறினார்..கணவர் பல அடி உயரத்தில் பறப்பதை கீழே இருந்து ப்ரீத்தி ஆசை ஆசையாக பார்த்து கொண்டே இருந்தார்.. அந்த நேரம் பார்த்து அரவிந்த் கட்டியிருந்த பாதுகாப்பு பெல்ட் திடீரென கழன்றிவிட்டதாக தெரிகிறது.

உயிரிழந்தார்
இதனால் அரவிந்த் மேலே இருந்து தொப்பென கீழே விழுந்தார்.. இதில் மண்டை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.. கணவன் தன் கண் முன்னாடியே கீழேவிழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை கண்டு பிரீத்தி அலறி துடித்தார்.. அரவிந்த விழுந்ததில் பாரா கிளைடரும் கீழே விழ ஆரம்பித்தது.

டெல்லி
இதனால், அதிலிருந்த பைலெட்டும் கீழே விழுந்ததில், பைலட் ஹரு ராமு என்பவருக்கும் பலமான அடிபட்டது.. அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார், அரவிந்த் உடலை கைப்பற்றி, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

விசாரணை
அரவிந்த் சரியாக பாதுகாப்பு பெல்ட்டை கட்டாததே இதற்கு காரணம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனிலவுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பி போன புதுமாப்பிள்ளை இப்போது பிணமாகி வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications