வெள்ளத்தால் சென்னையில் விமான சேவை ரத்து: டிக்கெட் கேன்சல் சார்ஜை ரத்து செய்ய விமான நிறுவனங்கள்
மும்பை: வெள்ளத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை என்று பல விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
டிசம்பர் 6ம் தேதி நண்பகல் 12 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னைக்கு மற்றும் சென்னையில் இருந்து கிளம்ப டிக்கெட் வாங்கியவர்களுக்கு அதற்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் அல்லது வேறு தேதிகளில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும்.
விமானங்கள் குறித்து தகவல் அறிய பயணிகள் www.jetairways.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் அல்லது விமான நிறுவனத்தின் கால் சென்டருக்கு 39893333 போன் செய்யவும். விமான சேவை மாற்றம் குறித்த தகவல்கள் டிராவல் ஏஜெண்டுகளிடம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications