நிஃப்ட் தலைவராக பாஜக முன்னாள் எம்.பி. சேத்தன் சௌஹான் நியமனத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு
டெல்லி: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட்-ன் புதிய தலைவராக பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் வீரருமான சேத்தன் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேத்தன் செளஹான் நியமனத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) துணைத் தலைவரான முன்னாள் எம்.பி. சேத்தன் செளஹான் நிஃப்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், நிஃப்டின் புதிய தலைவராக மத்திய அரசு என்னை நியமித்துள்ளது. அந்தப் பதவியில் திறம்படப் பணியாற்றுவேன் என்றார்.

ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
சேத்தன் சௌஹானை நிஃப்ட் கல்வி நிலையத்தின் தலைவராக பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு நியமித்துள்ளது. மோடியின் அரசு எப்போதும் தங்களுக்கு துதிபாடுபவர்களையே முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அமர்த்தி வருகிறது.

புனே பிலிம் இன்ஸ்டியூட் தலைவராக கஜேந்திர சௌஹான், சென்சார் போர்டு தலைவராக பஹ்லாஜ் நிஹலானி, மத்திய அமைச்சராக ஸ்மிருதி இரானி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு கேஜ்ரிவால் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications