குழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி!
சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நக்சல்கள் தேர்தலை நிறுத்த நிறைய சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ராய்பூர்: சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நக்சல்கள் தேர்தலை நிறுத்த நிறைய சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குண்டு வைப்பது, குழி தோண்டுவது, துப்பாக்கியால் சுடுவது என்று நிறைய வேலைகளை செய்து சட்டிஸ்கரில் நாளை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலை தடுத்த நிறுத்த நக்சல்கள் நிறைய திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் அங்கு 90 தொகுதிகள் உள்ளது.
அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு நாளையும், வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலின் போது தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

எங்கு
நாளை தேர்தல் நடக்க உள்ள 12 தொகுதிகளும் நக்சல் தாக்குதல் நிறைந்த தொகுதிகள் ஆகும். இதனாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அங்கு ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சட்டிஸ்கரில் தாண்டேவாடா காட்டுப்பகுதி, பிஜப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இன்று மட்டும் இதனால் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

நிறைய குழிகள்
இந்த நிலையில் சட்டிஸ்கரில் நிறைய காட்டுப்பாதைகள் ஒரு வழி பாதைகளில் நக்சல்கள் குழி தோண்டி அதை மறைத்து வைத்து இருக்கிறார்கள். வாகனங்கள், மக்கள் அந்த வழியாக செல்வதை தடுக்கும் வகையில் இந்த வேலையை அவர்கள் செய்து வைத்துள்ளனர். தற்போது பாதுகாப்பு படையினர் அந்த குழிகள் சிலவற்றை கண்டுபிடித்து மூடியுள்ளனர்.

ஹெலிகாப்டர்களை தாக்க திட்டம்
அதேபோல் நக்சல் துப்பாக்கிகள் மூலம் அங்கு வரும் ஹெலிகாப்டர்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. அதாவது அங்கு ஹெலிகாப்டரில் வரும் அரசியல்வாதிகளையும், அதிகாரிங்களை தாக்குவதற்காக, ஹாலிகாப்டர்கள் இறங்கும் இடம் என்று கணிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் பதுங்கு குழிகளை தோண்டி தாக்குதல் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

திருட திட்டம்
இதோடு, நக்சல்கள், வாக்களிக்கும் எந்திரத்தை திருடும் திட்டத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. அதாவது அங்கு வாக்களிக்கும் எந்திரங்களை எடுத்து செல்லும் வழியிலேயே அதை மறித்து திருட அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications