சாலை கட்டுமானத்தில் ஊழல்.. கேள்வி கேட்ட சத்தீஸ்கர் நிருபர் கொலை.. உடல் செப்டிக் டேங்கில் வீச்சு
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் குறித்து கேள்வி கேட்டு செய்தி வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கேள்வி எழுப்பிய ஒப்பந்தாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் அவர் இறந்துள்ளதால் கொலை செய்யப்பட்டு உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர் (வயது 28). பத்திரிகையாளரான இவர் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அதாவது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இதனால் அடிக்கடி மாவோயிஸ்ட் தாக்குதலை நடத்துவார்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கரில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் பிடித்து வைத்திருந்த சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை இவர் மீட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென்று முகேஷ் சந்திரகர் மாயமானார். இதுதொடர்பாக அவரது சகோதரர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று முகேஷ் சந்திரகரின் உடல் பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் கிடந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முகேஷ் சந்திரகர் பத்திரிகையாளரான இவர் சொந்தமாக யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பிஜப்பூரில் சாலை கட்டுமான ஊழல் தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையடுத்து சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது, அவரை சந்திக்க சென்ற இடத்தில் தான் முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் தான் முகேஷ் சந்திரகரை கடந்த 1ம் தேதி சந்திக்க அழைத்துள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து தான் செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications