சாலை கட்டுமானத்தில் ஊழல்.. கேள்வி கேட்ட சத்தீஸ்கர் நிருபர் கொலை.. உடல் செப்டிக் டேங்கில் வீச்சு
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் குறித்து கேள்வி கேட்டு செய்தி வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கேள்வி எழுப்பிய ஒப்பந்தாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் அவர் இறந்துள்ளதால் கொலை செய்யப்பட்டு உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர் (வயது 28). பத்திரிகையாளரான இவர் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அதாவது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இதனால் அடிக்கடி மாவோயிஸ்ட் தாக்குதலை நடத்துவார்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கரில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் பிடித்து வைத்திருந்த சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை இவர் மீட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென்று முகேஷ் சந்திரகர் மாயமானார். இதுதொடர்பாக அவரது சகோதரர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று முகேஷ் சந்திரகரின் உடல் பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் கிடந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முகேஷ் சந்திரகர் பத்திரிகையாளரான இவர் சொந்தமாக யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பிஜப்பூரில் சாலை கட்டுமான ஊழல் தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையடுத்து சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது, அவரை சந்திக்க சென்ற இடத்தில் தான் முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் தான் முகேஷ் சந்திரகரை கடந்த 1ம் தேதி சந்திக்க அழைத்துள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து தான் செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications