திரண்டு வந்த பெண்கள்.. சத்தீஸ்கரில் 'டாப்’ அவங்க தானாம்.. பின்னணியில் காங்கிரஸ், பாஜக செய்த வேலை!
ராய்பூர் : சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆண்களை விட அதிகமான அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றிய நிலையில், பாஜகவும் செம டஃப் கொடுத்து தேர்தல் பணி ஆற்றியுள்ளது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 70.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 75.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்டங்களையும் சேர்த்து 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கரில் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 2.03 கோடி வாக்காளர்களில் 77.48 லட்சம் ஆண்கள் வாக்களித்துள்ளனர். 78.12 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மொத்தமாக 1.55 கோடி பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட 64 ஆயிரம் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் தேர்தலில் அதிகமான பெண்கள் வாக்களித்த போதிலும், பிரதான அரசியல் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 பெண்களை வேட்பாளராக நிறுத்தியது. பாஜக வெறும் 15 பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்தது.
மலிவு விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு கல்வி வசதிகள் மற்றும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும் திட்டங்களையும் பெண்களை மையமாக வைத்து காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு அளித்ததற்கு இந்த வாக்குறுதிகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் 78.21 சதவீத ஆண் வாக்காளர்களும், 76.03 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. அங்கு மொத்த வாக்கு சதவீதம் 77.15% என்பது குறிப்பிடத்தக்கது
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications