திரண்டு வந்த பெண்கள்.. சத்தீஸ்கரில் 'டாப்’ அவங்க தானாம்.. பின்னணியில் காங்கிரஸ், பாஜக செய்த வேலை!
ராய்பூர் : சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆண்களை விட அதிகமான அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றிய நிலையில், பாஜகவும் செம டஃப் கொடுத்து தேர்தல் பணி ஆற்றியுள்ளது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 70.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 75.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்டங்களையும் சேர்த்து 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கரில் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 2.03 கோடி வாக்காளர்களில் 77.48 லட்சம் ஆண்கள் வாக்களித்துள்ளனர். 78.12 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மொத்தமாக 1.55 கோடி பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட 64 ஆயிரம் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் தேர்தலில் அதிகமான பெண்கள் வாக்களித்த போதிலும், பிரதான அரசியல் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 பெண்களை வேட்பாளராக நிறுத்தியது. பாஜக வெறும் 15 பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்தது.
மலிவு விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு கல்வி வசதிகள் மற்றும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும் திட்டங்களையும் பெண்களை மையமாக வைத்து காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு அளித்ததற்கு இந்த வாக்குறுதிகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் 78.21 சதவீத ஆண் வாக்காளர்களும், 76.03 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. அங்கு மொத்த வாக்கு சதவீதம் 77.15% என்பது குறிப்பிடத்தக்கது
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications