Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாநில சட்டசபை தேர்தல்: உ.பிக்கு 7 கட்டம், பஞ்சாப், கோவாவிற்கு பிப்ரவரி 4ல் ஒரே கட்டமாக தேர்தல்

நாட்டின் அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய நஜீம் ஜைதி, 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5 மாநிலங்களிலும் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாபில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் உள்ளன. 1,85,000 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Chief EC Commissioner addressing press conference to announce 5 State assembly election dates

•கோவா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நஜீம் ஜைதி தெரிவித்தார்.

•உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்

•மணிப்பூரில் மார்ச் 4ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 8ல் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் நஜீம் ஜைதி அறிவித்தார்

•மிக அதிக அளவில் சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11,15,19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

•5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 11ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார்.

முன்னதாக பேசிய அவர், மின்னணு முறையில் தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ராணுவத்தினர் இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்கு செலவழிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.20 லட்சம் மட்டும் செலவழிக்கலாம் எனவும் அறிவித்தார். மேலும் தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் செலவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் நஜீம் ஜைதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+