வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால்? அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி, தேர்தல் சீரமைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளது. அதற்காக 8 தேசிய கட்சிகளுக்கும் 47 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கின்றன என குற்ற்ச்சாட்டு எழுந்ததையடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் ஒடு இயந்திரம் மூலமே வாக்களிக்கப்படுகிறது. இது எளிமையானதாகவும் விரைவானதாகவும் உள்ளது என அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆனால், அண்மையில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது என பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும்ம்பான்மையான வெற்றியைப் பெற்றது.
பாஜகவின் இந்த வெற்றி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததால்தான் கிடைத்தது என ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத்தும் அமளியை உண்டாக்கினார்கள். அதோடு நில்லாமல், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து 'எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திர முறை வேண்டாம். பழைய வாக்கு சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்' என மனு கொடுத்தார்கள்.
அதையடுத்து, தேர்தல் ஆணையம் இனி யாருக்கு ஓட்டுப் போட்டும் என்பதை தெரிவிக்கும் விதமாக ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், தேசியவாத கங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநில மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம், ஒப்புகை சீட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications