வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால்? அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி, தேர்தல் சீரமைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளது. அதற்காக 8 தேசிய கட்சிகளுக்கும் 47 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கின்றன என குற்ற்ச்சாட்டு எழுந்ததையடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் ஒடு இயந்திரம் மூலமே வாக்களிக்கப்படுகிறது. இது எளிமையானதாகவும் விரைவானதாகவும் உள்ளது என அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆனால், அண்மையில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது என பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும்ம்பான்மையான வெற்றியைப் பெற்றது.
பாஜகவின் இந்த வெற்றி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததால்தான் கிடைத்தது என ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத்தும் அமளியை உண்டாக்கினார்கள். அதோடு நில்லாமல், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து 'எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திர முறை வேண்டாம். பழைய வாக்கு சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்' என மனு கொடுத்தார்கள்.
அதையடுத்து, தேர்தல் ஆணையம் இனி யாருக்கு ஓட்டுப் போட்டும் என்பதை தெரிவிக்கும் விதமாக ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், தேசியவாத கங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநில மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம், ஒப்புகை சீட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications