'மீறிட்டிங்க'.. அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா
இட்டாநகர்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திற்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில திட்டங்களை தொடங்கி வைக்க வந்திருந்தார். இந்நிலையில், இந்த வருகைக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு திபெத் பகுதியில் இருந்த புத்த மத்தின் தலைவர்கள் மற்றும் உள்ளூர் பெரும் பணக்காரர்கள் சேர்ந்து சீன அரசுக்கு எதிராக தொடர்ந்து பிரச்னைகளை செய்து வந்தனர். இதனையடுத்து சீன ராணுவம் 1951ம் ஆண்டு இவர்களை அடக்கி, திபெத் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அப்படிதான் தலாய் லாமா இங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இப்படி இருக்க இந்த திபெத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் சில இருக்கின்றன. இதனை இந்தயாவும் சீனாவும் தொடர்ந்து சொந்தம் கோரி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை இந்தியா அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி என்றும், சீனா இதனை தெற்கு திபெத்திய பகுதி (ஜாங்னான்) என்றும் உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரம் சில நேரங்களில் மோதல்களாக வெடிப்பதுண்டு. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள 11 கிராமங்களுக்கும் சீனாவின் குடிமையியல் விவகார அமைச்சகம் புதிய பெயர்களை சூட்டியிருந்தது. இது இந்தியாவில் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
ஏற்கெனவே கிழக்கு லடாக்கில் நடந்த மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான உரசல் போக்கை மேலும் அதிகரித்திருந்த நிலையில் சீனாவின் இந்த புதிய நடவடிக்கை இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடக்கி வைத்திருக்கிறார். இந்த திட்டம் இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டதாகும்.
அதன்படி தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 455 கிராமங்களில் இந்த திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கிராமங்களில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும். தொலைத் தொடர்பு, இணைய வசதி, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், இணைப்பு சாலைகள் ஆகியவற்றை இந்த திட்டத்தின் மூலம் சாத்தியப்படுத்த முடியும். அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது இமாச்சல், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 2022ம் ஆண்டு முதல் 2026ம் அண்டு வரை சுமார் ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தற்போதுதான் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசம் சென்றிருக்கிறார். இந்தியா-சீனா எல்லையில் உள்ள 'கிபித்தூ' எனும் கிராமத்தில்தான் அவர் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறைக்கான புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த வருகை குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் 'வாங் வென்பின்' கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் அமைச்சர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய 'ஜாங்னான்' பகுதிக்கு வந்திருப்பது என்பது சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறும் செயலாகும். ஏற்கெனவே இந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று முயன்றுக்கொண்டிருக்கையில் இது மேலும் பதற்றத்தைதான் அதிகரிக்கும்" என்று வாங் வென்பின் கூறியுள்ளார். மேலும் 'ஜாங்னான்' சீனாவின் ஒரு பகுதி என்றும் அழுத்தமாக கூறியுள்ளார். முன்னதாக சீனாவின் பெயர் மாற்ற விவகாரங்களை அமெரிக்கா வெளிப்படையாக கண்டித்திருந்தது. மட்டுமல்லாது இந்த சர்ச்சைக்குரிய பகுதியானது இந்தியாவுக்கு சொந்தம் எனவும் வெள்ளை மாளிகை விடுத்திருந்த அறிக்கையில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications