லடாக்கை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் வாலாட்ட நினைக்கும் சீனா- எல்லையில் புதிய சாலையால் டென்ஷன்
சிம்லா: லடாக் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா தற்போது இமாச்சல பிரதேசத்துக்கும் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் எல்லையில் புதிய சாலைகளை அமைப்பதில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம்.
இந்தியாவுடனான அத்தனை எல்லைகளிலும் தொல்லை கொடுத்து வருகிறது சீனா. லடாக்கின் கிழக்கில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

பின்வாங்க ஒப்புதல்
இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இருதரப்பு இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிலைகளில் நடைபெறுகின்றன. எல்லையில் இருதரப்பும் படைகளை பின்வாங்க ஒப்புக் கொண்டன.

சீனாவுடன் பேச்சுவார்த்தை
ஆனால் சீனா எல்லைகளில் நிலைகளை மாற்றி படைகளை குவிப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இருப்பினும் சீனாவுடன் மத்திய அரசு ராணுவம், ராஜதந்திர முறைகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

இமாச்சல் எல்லையில் சாலைகள்
இந்த நிலையில் இமச்சல பிரதேச எல்லையில் குடைச்சல் கொடுக்க களம் இறங்கியுள்ளது சீனா. எல்லையில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு சீனா புதிய சாலைகளை அமைத்து வருகிறதாம். இதனால் எல்லையில் ராணுவம் கூடுதலாக குவிக்கப்பட்டு லடாக் பிராந்தியத்தைப் போல பதற்றமாக்க சீனா முயற்சிக்கிறது.

இமாச்சல் பதற்றம்
லடாக்கின் கால்வின் பள்ளத்தாக்கை சர்ச்சைக்குரியதாக்கிய போது இமாச்சல பிரதேசத்தின் மொராங் பள்ளத்தாக்கு, கிமோகுல் கணவாய் பகுதிகளில் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போடுகிறது சீனா. இதனால் இமாச்சல் எல்லையிலும் தற்போது பதற்றமான நிலை உருவாகி உள்ளது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications