லடாக்கில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவி முகாமிட்டிருக்கிறது சீனாவின் படைகள்?
ஶ்ரீநகர்: லடாக் எல்லையில் நமது தேசத்துக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு சீனாவின் படைகள் ஊருவி முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
பூட்டானின் டோக்லாமை கைப்பற்றுவதற்காக 2017-ம் ஆண்டு சீனா முயற்சித்தது. டோக்லாமை கைப்பற்றுவதன் மூலம் வடகிழக்கு இந்தியாவுக்கு செக் வைக்க முடியும் என்பது சீனாவின் கனவு.

ஆனால் சீனாவின் ஊடுருவலை 73 நாட்கள் எதிர்கொண்டு நின்று முறியடித்தது இந்தியா. இதனால் டோக்லாமை கைப்பற்றிவிடலாம் என்கிற சீனாவின் கனவு தகர்ந்து தவிடு பொடியானது.
தற்போது உலகமே சீனா பரப்பிவிட்ட கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன. சீனாவின் கொரோனாவால் பல லட்சம் மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளன. இதனை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாடு பிடிக்கும் ஆசையில் மீண்டும் எல்லையில் வாலாட்ட தொடங்கியிருக்கிறது சீனப் படைகள்.
இப்போது சீனா குறிவைத்திருப்பது லடாக் எல்லைகள். லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாங்கோங் டிசோ, தவுலவத் பெக் ஓல்டி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கு இவைதான் இப்போது சீனாவின் இலக்குகளாக இருக்கின்றன. இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் படைகளை குவிக்கின்றோம் என்ற போர்வையில் பிரச்சனைக்குரிய இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவலை நடத்திக் கொண்டிருக்கிறது சீனா.
இப்படித்தான் இந்திய நிலப்பரப்பில் 3 கி.மீ. தொலைவுக்கு சீனா ஊடுருவி இருக்கிறது என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications