ஆந்திராவில் சோகம்.. 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்!
ஹைதராபாத்: ஈரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர்கள், நீதிமன்றத்தை நாடிய நெஞ்சை பிளக்கும் சம்பவம் தமிழகத்தின் அண்டை மாநில ஆந்திர நகரமான சித்தூரில் நடந்துள்ளது.
விவசாயியான ரமணப்பா, சரஸ்வதி தம்பதியின் 8 மாத பெண் குழந்தை ஞான சாய் பிறந்தது முதல் ஈரல் பாதிப்பில் அவதிப்பட்டு வருகிறது. 5 மாதமாக பெங்களூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இதற்காக ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

பணத்திற்காக அலைந்து பார்த்தும் முடியாததால், அந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர் சார்பில், தம்பல்லபல்லே ஜூனியர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி வாசுதேவ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தையோ அல்லது ஹைகோர்ட்டையோ அணுகும்படியும் உத்தரவிட்டார்.
ரமணப்பா நிருபர்களிடம் கூறுகையில், "நான் எனது குழந்தைக்காக ஈரல் தானம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அறுவை சிகிச்சைக்கு, ரூ.30 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும், ஈரல் தானம் செய்தவரும், அதை பெற்றுக்கொண்ட நோயாளியும், மாதம் தலா ரூ.30 ஆயிரம் மதிப்புக்கு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிவருமாம். அதற்கெல்லாம் பணமில்லாமல்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மீடியா செய்திகள் மூலம் தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ, சங்கர் யாதவ், தன்னால் முடிந்த உதவிகளை செய்து குழந்தையை காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என சங்கர் யாதவ் உறுதியளித்த நிலையில், அதன்படி முதல்வர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்கு தேவைப்படும் பண உதவியை செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications