கல்பர்கி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கொலையில் சோட்டா ராஜனுக்கு தொடர்பு?
டெல்லி: கோவிந்த் பன்சாரே, கல்பர்கி, தபோல்கர் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் சோட்டா ராஜனின் உத்தரவின்பேரில் அரங்கேறியிருக்கலாம் என புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிமுடன் இணைந்து நிழலுலக தாதாவாக உருவானவர் சோட்டா ராஜன். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்குவதற்காக, 1993ம் ஆண்டு மும்பையில் தாவூத்தால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் கசப்பு ஏற்பட்டு, தாவூத்தை விட்டு பிரிந்து எதிர் கோஷ்டியாக உருவெடுத்தவர் சோட்டா ராஜன்.

தாவூத் வலதுசாரி முஸ்லிம் அமைப்புகளுடனும், சோட்டா ராஜன், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளுடனும் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததாக உளவுத்துறை கூறுகிறது. இந்நிலையில்தான், சமீபகாலமாக, இந்துத்துவாவுக்கு எதிராக எழுதியும், பிரச்சாரம் செய்தும் வந்த எழுத்தாளர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். இதில் கோவாவை சேர்ந்த சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முற்போக்கு எழுத்தாளர்களான கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர் போன்றோர் கொலையில் ஒரே குழு திட்டமிட்டு இயங்கியிருப்பது தெரியவந்தது. அந்த குழுவின் தலைமை வெளிநாட்டில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளதும் தெரியவந்தது. இக்கொலைகளின் மூல காரணம் சோட்டா ராஜன்தான் என்றும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
கல்பர்கி சுட்டுக் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்தே, இது பயிற்சியில்லாத கூலிப்படையினரால் செய்யக்கூடிய கொலையில்லை என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்திருந்தது. ஏனெனில், துப்பாக்கியால் சரியாக குறி வைத்து சுடும் சாமர்த்தியம், நிழலுலக தாதாக்களின் ஆட்களுக்கே உள்ளது.
இந்நிலையில்தான், சோட்டா ராஜனை சுற்றிவளைக்க தீவிர திட்டமிட்டு, இன்டர்போலுக்கு இந்திய அரசு நெருக்கடி தர ஆரம்பித்தது. அதன்படி சோட்டா ராஜன் தற்போது இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேல், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆபத்து குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications