"மதுவை ஒழியுங்கள்... பால் குடியுங்கள்”- வித்தியாசமாக புத்தாண்டு கொண்டாடிய மகாராஷ்டிரா
மும்பை: மும்பையில் மதுவுக்கு பதிலாக பால் பருகுவோம் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்று கொண்டாடினர் மகாராஷ்டிர மாநில மக்கள்.
புத்தாண்டை கொண்டாடும் குடிமகன்களுக்கு வசதியாக இன்று அதிகாலை வரை மதுபார்களை திறந்துவைக்க மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்றிரவு குடிபோதையில் வாகனங்களை ஓட்டிவந்த 500க்கும் அதிகமானவர்களை மடக்கிப் பிடித்த போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தானே பகுதியில் மிதமிஞ்சிய போதையில் இருந்த ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை திடீரென தீயிட்டு எரித்தார். இதனால், அருகாமையில் இருந்த மேலும் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் சங்லி, புல்தானா உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் மதுஒழிப்பு இயக்கத்தினர் புத்தாண்டை சற்று வித்தியாசமான முறையில் வரவேற்றனர். "மதுவை மறப்போம், மதுவுக்கு பதில் பாலைப் பருகுவோம்" என்ற பேனர்கள் இப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications